×

வாக்களித்தவர்களுக்கு நன்றி மக்களவை தேர்தல் முடிவுகளை எண்ணி கூட்டணியினர் கவலைப்பட வேண்டாம் : ராமதாஸ் தேறுதல் அறிக்கை

ெசன்னை: மக்களவை தேர்தல் முடிவுகளை எண்ணி கூட்டணி கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தேறுதல் அறிக்கை வௌியிட்டுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் இந்த தேர்தல் முடிவுகளை பாமக ஏற்றுக்கொள்கிறது. பாமக தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்க வில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மக்களவை தேர்தல் முடிவுகளை எண்ணி பாமக மற்றும் கூட்டணியினர் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடர்ந்து நடத்த தமிழக மக்களின் தீர்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்.மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய அதிமுக, பாமக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : voters ,elections ,Lok Sabha ,Ramadoss , Thanks , voters, Lok Sabha ,election ,Ramadoss
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...