சாலை விபத்துகளில் 3 பேர் பலி

பெரம்பூர்: மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார் (20),  தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சையது ஜமீம் அன்சாரி (19) ஆகியோர், நேற்று முன்தினம்  இரவு ஒரே பைக்கில், வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கொடுங்கையூர் என்.எஸ்.கே. சாலையை சேர்ந்த சர்தார் (56) என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்:

பள்ளிக்கரணை, மயிலை  பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா (55). இவரது மகன் மோகன்ராஜ் (27). இவர்கள்  இருவரும் நேற்று மதியம் கோயம்பேடு சென்றுவிட்டு பைக்கில்  வீட்டுக்கு புறப்பட்டனர். வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே  சர்வீஸ் சாலையில் சென்றபோது, வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி  இறங்கியதால் கீழே விழுந்த சந்திரா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ்  லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மவுண்ட் போக்குவரத்து  புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories: