சென்னை: மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
அதிமுக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதேபோல் தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.