சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. அதைதொடர்ந்து காலை முதலே திமுக பொருளாளர் துரைமுருகன் கட்சி நிர்வாகிகளிடம் வீட்டில் இருந்தபடியே தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து துரைமுருகனை அவசர அவசரமாக வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.