முதுகுளத்தூர் அருகே கண்ணில் காதுடன் அதிசய ஆட்டுக்குட்டி

சாயல்குடி:  முதுகுளத்தூர் அருகே கண்ணில் காதுடன் இருக்கும் அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதியினர் ஆச்சரித்துடன் பார்த்து வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்தின். விவசாயியான இவர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவரது ஆடு போட்ட குட்டி ஒன்றின் கண்களில் தற்போதுகாது போன்று சதைவளர்ந்துள்ளதால் அப்பகுதியினர் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறும்போது, 2 ஆண்டுக்கு முன்பு பிறந்த இந்த ஆட்டுக்குட்டிக்கு கண்களின் இருபுறமும் சதை போன்று வளர்ந்து இருந்தது. நாளடைவில் அது காது போன்று வளர்ந்து கண்களை மூடி கொண்டது. இதனால் வீட்டில் கட்டிப்போட்டு இரை போட்டு பராமரித்து வருகிறோம். கால்நடை மருத்துவர் ஆலோசனையை கேட்டு கண்ணில் வளர்ந்துள்ள காதை போன்ற சதையை நீக்கி சிகிச்சையளிக்க உள்ளோம். வித்தியாசமாக இருப்பதால் அருகிலுள்ளவர்கள் ஆச்சரித்துடன் பார்த்து செல்வதாக கூறினார்.

Related Stories: