வேளச்சேரி: பள்ளிக்கரணையில் 700 ஆண்டு பழமையான ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை பூசாரி கோயிலை திறப்பதற்காக வந்தபோது கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த பகுதியில் ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.