சென்னை: ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள அனைவராலும் வயது வித்தியாசம் இல்லாமல் கற்றுக்கொள்ள முடியும் என பிரபலமான ஓவியர் அரஸ் கூறியுள்ளார். இதுகுறித்து ஓவியர் அரஸ் கூறுகையில், ‘‘ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள பெரும்பாலானவர்களுக்கு எங்கு கற்பது? என தெரியாது. அப்படிப்பட்ட அனைவருமே ஓவிய கலையின் அடிப்படை நுணுக்கங்களை வயது வித்தியாசம் இல்லாமல் கற்க முடியும். ஓவியங்களை பார்த்து ரசிப்பவராக இருந்த அனைவராலும் இனிமேல் ஓவியங்களை வரைய முடியும்.இதன் மூலம் சிறந்த ஓவியராக புகழ்பெற விரும்பினாலும் இந்த பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பயிற்சியை வார இறுதி நாட்களில் நானே நேரடியாக சிறந்த முறையில் வழங்க உள்ளேன்.