புழல்: பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் செயல் அலுவலராக சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி தனது உதவியாளர் தனஞ்செழியனுடன் பைக்கில் சென்றபோது, ஒரு கும்பல் சீனிவாசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தனஞ்செழியனுக்கும் வெட்டு விழுந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், கோயிலில் எழுத்தராக பணிபுரியும் வெங்கடேசன் என்பவரே செயல் அலுவலர் தாக்குதலுக்கு முக்கிய புள்ளி என தெரியவந்தது. இதையடுத்து, செயல் அலுவலரை தாக்கியதாக தனசேகர், தனஞ்செழியன், கிருபாகரன், சதீஷ், தினேஷ்குமார், வெங்கடேசன் ஆகிய 6 பேரை கடந்த 17ம் தேதி போலீசார் கைது செய்தனர்.