புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு வரும் எம்பிக்களுக்கு அரசு விடுதிகள், இல்லங்களில் தங்க ஏற்பாடு செய்யப்படும் என மக்களவை செகரட்டரி ஜெனரல் ஸ்நேகலதா வஸ்தவா கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில் வெற்றி பெறும் எம்பிக்கள் நாளை முதல் டெல்லிக்கு வர தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்றதும் டெல்லி வரும் எம்பிக்கள் ஓட்டல்களில் தங்கிவிட்டு அரசிடம் பில் தொகையை வாங்கிக் கொள்கின்றனர். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.