மும்பை: தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில், பங்குச்சந்தை நிலவரங்களை செபி தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது. மத்தியில் நிலையான அரசு அமையுமா என்ற பதைபதைப்பில் முதலீட்டாளர்கள் இருந்ததால், கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.8.53 லட்சம் கோடியை இழந்தனர். கருத்துக்கணிப்பில் பாஜ வெற்றி பெறலாம் என்று வெளியானதால், பங்குசந்தைகள் கடந்த திங்கட்கிழமை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன.