புதுடெல்லி: சீன போன்களால்
இந்திய நிறுவனங்கள் உட்பட பிரபல பிராண்ட் மொபைல்கள் விற்பனை கடுமையாக
சரிந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்தி
விட்டதாக சோனி நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்தியா உட்பட மத்திய, தென்
அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் விற்பனையை
நிறுத்தி விட்டோம். இருப்பினும் தற்போது சோனி போன் வைத்துள்ளவர்களுக்கு
வாடிக்கையாளர்கள் சேவைதொடரும். சாப்ட்டேவர் அப்டேட்கள் தொடர்ந்து
வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.