ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.