மும்பை: படிப்பதற்காக மும்பை வந்த பிரேசில் நாட்டு மாணவியை பலாத்காரம் செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர். தென் மும்பை, கபரேட் பகுதியில் வசித்து வருபவர் பத்மாகர் நந்தேகர் (52). அந்த பகுதி குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவி, இளைஞர்கள் பரிமாற்றம் திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு படிப்பதற்காக வந்தார். அவர் கபரேடு பகுதியில் பத்மாகருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், பத்மாகர் கடந்த ஏப்ரல் 15ம் தேதி அந்த மாணவியை இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்தார்.