சென்னை: மத்திய கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும்பிடுகு முத்தரையரின் 1,44வது சதயவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கிய பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சி காலங்களில் தமிழை வளர்ப்பதிலும், சம தர்மத்தை பேணுவதிலும் முக்கிய பங்காற்றி இருப்பது அவரது வரலாற்றை படிக்கும்போது அறிய முடிகிறது. நான் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் நேரடியாக கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.