திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆள்மாறி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள கருவாரகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவரது மகன் முகமது டானிஷ்(15). மூக்கு அறுவை சிகிச்சைக்காக டேனிஷை மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் டேனிஷிற்கு மூக்கிற்கு பதிலாக வயிற்றில் ஹிரண்யா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.