மூக்கிற்கு பதில் ஹிரண்யா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆள் மாறி சிறுவனுக்கு ஆபரேஷன்: மலப்புரம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆள்மாறி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள கருவாரகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவரது மகன் முகமது டானிஷ்(15). மூக்கு அறுவை சிகிச்சைக்காக டேனிஷை மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் டேனிஷிற்கு மூக்கிற்கு பதிலாக வயிற்றில் ஹிரண்யா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வயிற்றில் கட்டுடன் வந்த சிறுவனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் தனுஷ் என்ற சிறுவனுக்கு பதிலாக டானிஷிற்கு ஆள்மாறி அறுவை சிகிச்சை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆள் மாறி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சுரேஷ்குமாரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் அவர் சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: