பழநி கோயிலில் மகனுடன் ஓபிஎஸ் திடீர் தரிசனம்

 பழநி: மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய நேற்று மாலை வந்திருந்தார். உடன் அவரது மகனும், தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார், மற்றொரு மகன் பிரதீப் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து தங்கரதம் இழுத்தும் வழிபாடும் செய்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்டோரும் சுவாமி தரிசனம் செய்தனர். நிருபர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளேன்’ என கூறிவிட்டு சென்றார்.

Related Stories: