கிருஷ்னகிரி: ஊத்தங்கரையில் லஞ்சம் வாங்கி கைதான ஆய்வாளர் நடராஜனின் சேலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே மல்லூர் பகுதியில் உள்ள நடராஜன் இல்லத்தில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் காவல் ஆய்வாளர் நடராஜன் கைது செய்யப்பட்டார்.