சென்னை: கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்ற பெயரில் விளக்கக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு வழங்கியது. விளக்கக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோட்சே பற்றி விளக்கம் அளிக்க 26-ல் சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.