வாக்காளர் உரிமைகளை பாதுகாக்கும் தகுதி இல்லை: தேர்தல் ஆணையம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் ஆணையத்திடமிருந்து ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்களிக்க முடியாதவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று மன்றாடியும் கூட, அதற்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் இருப்பதாக கூறினார்.

வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தகுதியும், வலிமையும் அற்றதாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று திருமாவளவன் சாடினார். ஆளும் கட்சிக்கு சேவை செய்யும் எடுபுடி அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை தகர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

Related Stories: