லண்டன்: லண்டனில் தொடங்கிய மலர் கண்காட்சியை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பார்வையிட்டார். வசந்த கால மலர் கண்காட்சி எனப்படும், செல்சி மலர் கண்காட்சியானது ஆண்டுதோறும், மே மாதம் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். செல்சி மலர் கண்காட்சியில் விதவிதமாக அலங்காரம் செய்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை மக்கள் கண்டு ரசிப்பர். செல்சி மலர் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதற்கு முன்னதாக நேற்று அங்கு சென்ற ராணி, தோட்ட பராமரிப்பாளர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.