ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் 26-வது தேசிய நெடுஞ்சாலையில் ஜரிங் என்ற இடத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.