ஒடிசாவில் நிகழ்ந்த சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி... 2 பேர் படுகாயம்

ஒடிசா: ஒடிசாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் 26-வது தேசிய நெடுஞ்சாலையில் ஜரிங் என்ற இடத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான கார் முழுவதும் சேதமாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: