சிதம்பரம்: சிதம்பரம் அருகே நடைப்பெற்ற திருநங்கைகளுக்கான அழுகிப் போட்டியில் பழனியைச் சேர்ந்த தேன்மொழி முதல் பரிசை தட்டிச் சென்றார். சிதம்பரம் அருகே கோத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. வழக்கமாக ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநங்கைகள் 40 ஆண்டுகளில் முதற்முறையாக நாட்டுப்புற பாடல்களை பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைப்பெற்றது.