திருவில்லிபுத்தூர் : தொடர் மழையின்மை மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக திருவில்லிபுத்தூர் நகரில் முக்கியமான குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் வறண்டு போய் உள்ளன. திருவில்லிபுத்தூர் நகரைப் பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மிகப்பெரிய கண்மாய் ஆன பெரியகுளம் கண்மாய் மற்றும் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் பழையகுளம் மற்றும் புதிய குளம் வறண்டு காணப்படுகிறது.