சென்னை: தமிழ்நாட்டில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு கூறியுள்ளார். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். செல்போன் செயலி மூலம் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர். திருவள்ளூரில் அதிகபட்சமாக 34 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். 19 கம்பெனி துணை ராணுப்படையின் 1,520 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 36 அயிரம் காவலர்கள், துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று சாகு அறிவித்துள்ளார்.