பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹95.90 லட்சம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் ₹95 லட்சத்து 90 ஆயிரம் காணிக்கையாக கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு, பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பின்னர்  எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாததிற்கான பவுர்ணமி கடந்த 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் அதிகாலை நிறைவடைந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதைத்தொடர்ந்து, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக ₹95 லட்சத்து 90 ஆயிரத்து 183ம், 180 கிராம் தங்கம், 663 கிராம் வெள்ளி கிடைத்தது.

Related Stories: