×

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை சரியாக 6.09 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோ மீட்டராக இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதேபோல நேற்று நள்ளிரவு அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

இதையடுத்து காலையில் 6.09 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோல அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த மே 17ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாதது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தமான் நிகோபார் தீவுகள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் இடத்தில் அமைத்துள்ளது. இதனால், ஒரு நாளைக்கு 2க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்படுவது அசாதாரணமான விஷயம் ஒன்றும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் மட்டும் அந்தமான் நிகோபார் தீவுகளில் 20 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : earthquake ,Andaman and Nicobar Islands , Andaman and Nicobar, islands, earthquake
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்