புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பர்கர் கடையின் பர்கரில் கண்ணாடி துண்டுகள் இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் சஜீத் பதான். இவர் தந்து நண்பர்களுடன் பந்தயம் கட்டி தோற்றதால், நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க, கடந்த சனிக்கிழமை பர்கர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டே பர்கரை சஜீத் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நொடிகளில் சஜித்துக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது.