சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்திய பிறகு தமிழகத்தில் 13 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 13 மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் குறைவான அளவே மணல் கிடைப்பதால் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. எனவே, புதிதாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன்பேரில், 22 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. தற்போது, 13 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, தேர்தல் நடத்தை விதிமுறை தளர்ந்த பிறகு புதிதாக 13 குவாரிகள் திறக்கப்பட்டு, அதன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க 60 குவாரிகள் வரை திறக்கப்படுகிறது. தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ள 13 குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மணல் விலை ஒரு யூனிட் ரூ.550 என விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ.1300க்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.