இலங்கை விடுதலை செய்த 8 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

அவனியாபுரம்:  ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில், கடந்த ஜன.11ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், தமிழக மீனவர்களின் படகில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், படகில் இருந்த  ராமேஸ்வரத்தை சேர்ந்த முனியசாமி (55) உயிரிழந்தார். மற்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய தூதரக நடவடிக்கையையடுத்து, கடந்த 3ம் தேதி 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தனியார் விமானத்தில் கொழும்பிலிருந்து நேற்று மதுரை வந்தனர். அங்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை ஆய்வாளர் கவுதமன், மீனவர்களை வரவேற்று, கார் மூலம் ராமேஸ்வரம் அழைத்துச் சென்றார்.

Related Stories: