இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ திரங் அபோவ் மற்றும் அவரது மகன் உள்பட 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். அருணாச்சலப் பிரதேசத்தில் பீமா கண்ட் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கோனார்ட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏவாக இருந்தவர் திரங் அபோ (41). சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு கோன்சா தொகுதியில் இவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில் அசாமில் இருந்து நேற்று தனது தொகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோருடன் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் திரப் மாவட்ட பகுதியில் வந்துக் ெகாண்டிருந்தபோது நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பினர் சரமாரியாக அவர் சென்ற வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் எம்எல்ஏ திரங் அபோ, அவரது மகன், பாதுகாப்பு அதிகாரி உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைய ஒரு பாதுகாப்பு அதிகாரியை போலீசார் மீட்டு அசாமின் திப்ருகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.