புதிய 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

மும்பை: ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திகாந்த தாஸின் கையொப்பம் இடம்பெற்றிருக்கும். ரிசர்வ் வங்கி இதுவரையில் வெளியிட்டுள்ள 10 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. புதிய 10 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் (புதிய) புகைப்படம், பழைய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டது போலேவே இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரலில் ரிசர்வ் வங்கி அறிவித்தப்படி புதிய 200, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அவற்றில் காந்தியின் புதிய புகைப்படமும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸின் கையொப்பமும் இடம்பெற்றுள்ளது.

Related Stories: