கருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்ட ஓபராய்

புதுடெல்லி: தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு விவேக் ஓபராய் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஐஸ்வர்யா-சல்மான் கான் உறவு போன்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பானது ஐஸ்வர்யாவுக்கும் எனக்குமான உறவு போன்றது. இறுதியில் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இதுதான் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான இறுதி முடிவு’’ என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘‘தோல்வியடைந்தவரே, ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கை பற்றிய முட்டாள்தனமான ஜோக் இது’’ என்று நெஹர் என்பவர் பதிலடி கொடுத்துள்ளார். விவேக் ஓபராயின் இந்த அநாகரீகமான டிவீட் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: