முசாபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் செல்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுவன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனபவான் பகுதியில் அனுமான் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூசாரி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.