சென்னை: தேசிய அளவிலான ஜூனியர் தரவரிசை பேட்மின்டன் போட்டி (யு-19 ) சென்னையில் இன்று தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பேட்மின்டன் சங்க பொதுச் செயலர் வே.அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான இந்த தொடர் மே 21ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சுமார் 1200 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 175 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அறிமுக வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவே இப்படி அதிக எண்ணிக்கையில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.