மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடிக்கும் அந்த வங்கிக்கும் இடையே தரகராக செயல்பட்ட சுபாஷ் பரப் எகிப்து நாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கெய்ரோ புறநகர் பகுதி ஒன்றில் நீரவ் மோடியின் கூட்டாளிகளான தமீர் மற்றும் முகமது ஆகிய இரண்டு எகிப்து பிரஜைகள் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மே 8ம் தேதி லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது தடவையாக மறுத்தபோது அவருடைய வழக்கறிஞர்கள் சுபாஷ் பரப் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதை மறுத்தனர்.