துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 24 ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலியாகினர். தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாதில் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கு இடையே நேற்று முன்தினம் திடீரென தகராறு ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில், சிறைக் காவலர்கள் 3 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். பின்னர் சிறைக் கைதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரக்காரர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர், கலவரத்தை அடக்க முயன்றனர்.