×

பிரேசில் பாரில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி

பிரேசில்: பிரேசில் நாட்டில் உள்ள பாரா மாகாணம், பெல்லம் பகுதியில் மதுபான பார்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென புகுந்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அந்த கும்பல், பைக் மற்றும் கார்களில் தப்பிச்சென்றது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் யார், எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : bar ,Brazil , Shooting in Brazil bar 11 killed
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்