ஓசூர்: தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், பிரமாண்ட பெருமாள் சிலை கடந்து செல்ல வசதியாக ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றில், சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணி மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.