பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு சபரிராஜன் பெற்றோரிடம் சிபிஐ விசாரணை:

பொள்ளாச்சி:  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல்  பலாத்காரம் செய்த வழக்கில்  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து  சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின்  அடிப்படையில்  தனித்தனிக்குழுவாக  முகாமிட்டு ரகசியமாக விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று மதியம் 2 மணியளவில் பொள்ளாச்சி ஜோதிநகரில் உள்ள சபரிராஜன் வீட்டிற்கு, சிபிஐ  அதிகாரிகள் இருவர் வந்தனர். பின்னர் வீட்டின் கம்பவுண்ட் கேட் மற்றும் வீட்டு  முன்பக்க கதவை பூட்டினர். வீட்டிலிருந்த சபரிராஜன் பெற்றோரிடம் 40 நிமிடம் விசாரணை நடத்தி னர். ஏற்கனவே,  சபரிராஜன் வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், தற்போது 2ம்  கட்டமாக அவரின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில்,சபரிராஜனையடுத்து  சதீஸ், மணிவண்ணன், வசந்தகுமார் ஆகியோரது  வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு  செய்வதுடன், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்த  சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து பொள்ளாச்சியிலேயே முகாமிட்டுள்ளனர்.

Related Stories: