புதுடெல்லி: எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம், விவிபேட் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், தெலுங்கு தேசம் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மாலை புகார் மனு அளிக்க உள்ளன. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 50 சதவீத விவிபேட் சீட்டுகளை, ஓட்டு இயந்திரத்தின் பதிவுகளுடன் சரிபார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் 21 எதிர்க்கட்சிகள் மனு அளித்தன. இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 5 விவிபேட் இயந்திர பதிவுகளை சரிபார்க்க உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்பில் பா.ஜ மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது.