23ல் மக்கள் எழுதிய முடிவுரை தெரிந்துவிடும் டிடிவி.தினகரன் டிவிட்டரில் கருத்து

சென்னை: இந்த ஆட்சிக்கு மே 23ம் தேதி மக்கள் எழுதிய முடிவுரை தெரிந்துவிடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது, ‘மக்களுக்கு உயிர் முக்கியம், அதைப்பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்’ என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசி இருக்கிறார் பழனிசாமி. இது தான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம். சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து கார்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப்போவதில்லை. இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23ம் தேதி தெரிந்துவிடும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories: