பள்ளி மாணவன் கொலை பாஜ பிரமுகர், மகன் சிறையில் அடைப்பு

சென்னை: பல்லாவரம் அருகே பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜ பிரமுகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் நந்தா (19), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர் விக்னேஷ் (16), இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவு குரோம்பேட்டையில் நடந்த மாதா கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு நாகல்கேணி பிரதான சாலை வழியாக நண்பர்கள் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (22) என்பவர் சாலையை வழிமறித்து நின்றார். உடனே அவரது கையை பிடித்து இழுத்து இருவரும் தள்ளிவிட்டு விட்டு சென்றனர். அவர்கள் நிகழ்ச்சி முடிந்து சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது, அங்கு நித்யானந்தமும், அவரது தந்தை பம்மல் நகர பாஜ தலைவர் மதன் (42) என்பவரும் நாகல்கேணி அருகே பைக்கில் வந்த நந்தா, விக்னேஷ் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நந்தாவிற்கு 9 தையல் போடப்பட்டது. விக்னேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கர்நகர் போலீசார் நித்யானந்தம், அவரது தந்தை மதன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: