சென்னை: பல்லாவரம் அருகே பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜ பிரமுகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் நந்தா (19), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர் விக்னேஷ் (16), இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவு குரோம்பேட்டையில் நடந்த மாதா கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு நாகல்கேணி பிரதான சாலை வழியாக நண்பர்கள் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (22) என்பவர் சாலையை வழிமறித்து நின்றார். உடனே அவரது கையை பிடித்து இழுத்து இருவரும் தள்ளிவிட்டு விட்டு சென்றனர். அவர்கள் நிகழ்ச்சி முடிந்து சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.