நாகை: வாக்கு எண்ணிக்கை அன்று கூடுதல் விலைக்கு விற்க காரைக்காலில் இருந்து லோடு ஆட்டோவில் திருச்சிக்கு கடத்தி வந்த மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் ெசய்யப்பட்டது. நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் எஸ்ஐகள் மோகன்ராஜ், ராஜேந்திரன், மாரியப்பன், ஏட்டு சாலமன் சார்லஸ் ஆகியோர் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் தண்ணீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாட்டில்களுக்கு பின்னால் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புல் பாட்டில் 375, பீர் பாட்டில் 400 மற்றும் 27 பெட்டிகளில் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சம். இந்த மது பாட்டில்களையும், லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.