×

100 நாள் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு தேவை: விவசாயிகள் குடை ஏந்தி நூதன போராட்டம்

திருவண்ணாமலை: 100 நாள் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் குடை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் குடை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


Tags : 100 day ,workforce , farmers carry ,umbrella ,struggle
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100...