சென்னை: ஐடி ஊழியர்களிடம் வழிப்பறி செய்த கானாத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தென் மண்டல இணை ஆணையர், அடையாறு துணை ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கார்த்திக், யஷ்வந்த்தை தாக்கி காவலர்கள் தணிகாசலம், பாலசுப்ரமணியன் ரூ.2000 பறித்ததாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. 2 காவலர்கள் மீது ஏன் வழிப்பறி வழக்கு பதிவு செய்யவில்லை என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.