கும்பகோணம்; தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு தற்போது இல்லை என்று கர்நாடக அரசு கைவிரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 2018 டிசம்பரிலிருந்து மாதம் தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நிலையில் மக்கள் அனைவரும் தண்ணீருக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்நத 6 மாதங்களாக காவேரியில் முறையாக நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் தவிக்கின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக பொதுப்பணித்துறை ரேவண்ணா ஆகியோர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் இன்று தரிசனம் செய்தனர்.