தமிழகம் குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனுத்தாக்கல் May 20, 2019 சகோதரன் நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சரணடைந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமுதவள்ளி, அவரது கணவர் ரவிசந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடை தரகர்களான பர்வின், நிஷா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய அமுதவள்ளியின் சகோதரரான நந்தகுமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை நந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர்: வனத்துறை ஏற்பாடு
சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார் அம்மன்; உடுமலையில் நடைபெற்று வரும் தேரோட்டத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் ஜூன் 7க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கெடு
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிப்பு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
முகூர்த்த தினம், வார இறுதிநாள் என்பதால் விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!