தஜிகிஸ்தான் சிறையில் ISIS தீவிரவாதிகள் கலவரம் : 32 பேர் பலி

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 3 சிறைக் காவலாளிகள் மற்றும் 29 கைதிகள் உள்ளிட்ட 32 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் துஷான்பேவுக்கு அருகே உள்ளது வாக்டட் சிறையில்  1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும்  பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் அந்த சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்தனர். இதனை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. பின்னர் பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் கைதிகளின் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 29 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: