சென்னை : கருத்துக்கணிப்புகளை திமுக ஒருபோதும் பொருட்படுத்தாது என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். 3 நாட்களில் தெரிய போகும் மக்களின் கணிப்புக்காக காத்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்பதை 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தாம் தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறினார். மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துதில்லை என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.