தொழில்நுட்ப பணிகள் நடப்பதால் மே 21 - 26 வரை ரயில் சேவை தாமதமாகும்

சென்னை: அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில் தொழில்நுட்ப பணிகள் நடப்பதால் மே 21 - 26 வரை ரயில் சேவை தாமதமாகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூருவில் இருந்து சென்னை சென்டரல் வரும் டபுள் டெக்கர் ஏ.சி. ரயில் 80 நிமிடம் தாமதமாக வந்தடையும் எனவும் கூறப்படுகிறது. பெங்களூருவிலிருந்து வரும் பிருந்தாவன் விரைவு ரயில் சென்னை சென்டரலுக்கு 60 நிமிடங்கள் தாமதாக வந்தடையும் என கூறப்படுகிறது.

Related Stories: